search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களை சந்திக்கிறார்"

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட ‘மக்களுடனான பயணம்’ அடுத்தக்கட்டமாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.



    9-ந்தேதி:- நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, பாலக்காடு, கரிமங்கலம், தர்மபுரி,

    10-ந்தேதி:- அரூர், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகிற 12-ந்தேதி முதல் 3 நாட்கள் சேலம், நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். அவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்கிறார்.

    ஏற்கனவே ஈரோடு, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மாணவ-மாணவிகளுடனும் கலந்துரையாடினார்.

    இந்த நிலையில் கமல்ஹாசன் வருகிற 12-ந்தேதி முதல் 3 நாட்கள் சேலம், நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    12-ந்தேதி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, மல்ல சமுத்திரம், இளம்பிள்ளை ஆகிய இடங்களிலும், 13-ந்தேதி ஓமலூர், மேட்டூர், கங்கவள்ளி, ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், பள்ளப்பட்டி, கோட்டை பாளையம் ஆகிய இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

    14-ந்தேதி நாமக்கல், மல்லூர், ராசிபுரம், புதுசத்திரம், திருச்சேங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய இடங்களில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    ×